இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த இளைஞருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிரைப் பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
அடிமைப்படுத்தும் பப்ஜி கேம்..!
உலகம் முழுவதும் பல கோடிக்கு மேற்பட்ட இளைஞர்கள் பப்ஜி கேமிற்கு அடிமையாக உள்ளனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் இதில் அதிக நேரம் செலவிடுகின்றனர். உயர்தொழில்நுட்பம், அதிரடியான கிராபிக்ஸ் போன்ற பல காரணங்களுக்காக இந்த கேம் பல தரப்பட்டவர்களிடம் மிகப் பிரபலமாக உள்ளது. அதிக நேரம் இதில் செலவிடுவதால் உடலில் பல்வேறு கோளாறுகளை இது ஏற்படுத்தக்கூடும்.
மூளையில் ரத்தக்கசிவு…!
மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஷிண்டேவாடி பகுதியைச் சேர்ந்த ஹர்ஷல் மீமான் என்ற 25 வயது இளைஞர் வீட்டில் பப்ஜி கேமினை விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்பு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், இளைஞர்கள் அதிக நேரம் வீடியோ கேமில் செலவிடுவதால் இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அதிக நேரம் மொபைல் போனில் செலவிட அனுமதிக்க கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |