ஜனவரி 26 நாளை நாடு முழுவதும் 71வது குடியரசு தினவிழா உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தலைநகர் டெல்லி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
முப்படை அணிவகுப்பு..!
தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கான அனைத்து ஒத்திகைகளும் முடிவடைந்து உள்ளது. அங்கு முப்படை அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் அலங்காரயூர்திகளின் அணிவகுப்பு ஆகியவை நடைபெறவுள்ளன.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
மேலும் தமிழகம் சார்பில் ஐயனார் கோவில் கோடை விழா போன்ற காட்சி அமைப்பு அணிவகுப்பில் இடம்பெறுகிறன.
தீவிரவாத அச்சுறுத்தல்..!
டெல்லியில் அண்மையில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். டெல்லி நகர் முழுவதும் காவல் துறையினர், துணை இராணுவ படைவீரர்கள் மற்றும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை, சாந்திநிஷாக் என்கின்ற, 150க்கும் மேற்பட்ட இடங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேருந்து மற்றும் இரயில் நிலையங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |