டிக் டாக் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜி.பி.முத்து விஜய் டிவியில் களமிறங்கவுள்ளார். அதுவும் பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.
ஜி.பி.முத்து
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிக்டாக் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தது. எங்கு யாரை பார்த்தாலும் டிக்டாக்கில் தான் மூழ்கி இருந்தனர். மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் பலரும் மோசமாக இறங்க ஆரம்பித்தனர். மேலும் டிக்டாக் மூலம் தான் பலருக்கும் படவாய்ப்புகள் குவிந்தன.
அதனால் பலரும் டிக்டாக்கில் மோசமான விடியோக்களை பதிவிட ஆரம்பித்தனர். இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. டிக்டாக்கை தடை செய்ய பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட்டது. அப்படி இந்த டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து.
இவரும் ரவுடி பேபி சூர்யாவும் இணைந்து செய்த அட்டகாசங்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. மேலும் சில நாட்களாக அடங்கி போயுள்ளனர் இருவரும். இந்நிலையில் ஜி.பி.முத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கவுள்ளாராம். இந்த செய்தியை கேட்ட பலரும் ஷாக்கில் உள்ளனர்.