மீனவரை விழுங்கிய திமிங்கலம்.. வயிற்றுக்குள் இருந்து உயிருடன் வந்த நபர்…

0

அமெரிக்காவில் இறால் பிடிக்க சென்ற மீனவர் ஒருவரை ராட்சத திமிங்கலம் விழுங்கி 40 வினாடிகள் வயிற்றுக்குள் வைத்திருந்து வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள Massachusetts என்ற மாகாணத்தின் Provincetown என்ற பகுதியில் வசிக்கும் மீனவர் மைக்கேல் பெக்கார்ட், இவருக்கு வயது 56. இவர் வசிக்கும் இந்த பகுதி கிட்டத்தட்ட 90 சதவீதம் கடலால் சூழப்பட்டது. இவர் இறால்களைப் பிடிப்பதையே சுமார் 40 ஆண்டுகளாக தொழிலாக செய்து வருபவர். வழக்கமாக இவர் ஆழ்கடலில் ராட்சத இறால்களைப் பிடிப்பார்.

வழக்கம் போல கடலில் தனது வேலையை செய்துகொண்டிருந்தபோது, அவரை எதோ ஒன்று பலமாக இடித்தது போல தெரிந்துள்ளது, அடுத்த சில நொடிகளில் அவருக்கு அனைத்தும் இருட்டாக மாறியுள்ளது. பின்னர் தான் ஒரு சுறா மீனால் விழுங்கப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்துள்ளார்.

சுமார் 40 நிமிடங்கள் அந்த திமிங்கலத்தின் பிடியில் இவர் சிக்கி தவித்துள்ளார். பின்னர் அந்த திமிங்கிலம் அவரை விடுவித்துவிட்டது. சில நொடிகளில் அவர் கடலின் மேற்பரப்புக்கு வந்துவிட்டது அவருக்கு தெரிந்துள்ளது. அவர் சுமார் 30 முதல் 40 நொடிகளுக்கு திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here