தமிழ் திரைத்துறை மட்டுமின்றி அனைத்து திரைதுறைகளிலும் ஒரு காலத்தில் கலக்கியவர் தான், நடிகை ஜெனிலியா. இவர் தற்போது தான் படுகாயம் அடைந்துள்ள விடீயோவினை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.
நடிகை ஜெனிலியா
தமிழ் திரைத்துறையில் தங்களது குறும்புத்தனம் மூலமாக பலரையும் கவர்ந்த நடிகைகள் சிலர் மட்டுமே. அந்த வரிசையில் இருந்தவர் தான், நடிகை ஜெனிலியா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் மிகவும் சிறிய பெண்ணாக இருப்பார். அந்த படத்தின் முதல் பாதியில் குறும்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார். அடுத்த பாதியில் சீரியசான பெண்ணாக நடித்திருப்பார்.
சுமதிக்கு நடக்கும் கொடுமையில் இருந்து காப்பாற்றும் கண்ணம்மா – அனல்பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!!
இந்த படத்திற்கு பின்பு தமிழில் பல ஆண்டுகளுக்கு பிறகு “சந்தோஷ் சுப்பிரமணியம்” திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று தனது என்று கூட சொல்லலாம். தனது எதார்த்தமான அதே சமயம் குறும்பான நடிப்பின் மூலமாக அனைவரையும் ஈர்த்திருப்பார். இத்துடன் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என்று அனைத்து திரைதுறைகளிலும் கலக்கினார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜெனிலியாவும் பொறுப்பான தாயாகவும், குடும்ப தலைவியாகவும் மாறி விட்டார். இதனை அடுத்து ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினையும் விடீயோவினையும் வெளியிட்டார். ஸ்கேட்டிங் செய்யும் போது தவறி விழுந்த போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் அவர் படுகாயம் அடைந்த புகைப்படம் ஆகும். இதனை பார்த்து விட்டு அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
முழு விடீயோவினையும் பார்க்க கிளிக் செய்யுங்க!!