பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக அறியப்பட்டவர் தான் நடிகர் பிரபாஸ். தற்போது இவர் நடிப்பில் சலார் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.இதனை தொடர்ந்து கல்கி என்ற வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி நிற்க கூட நேரம் இல்லாமல் தொடர்ந்து பிசியாக இருந்து வரும் இவரை ஒரு பெண் கன்னத்தில் அடித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, நடிகர் பிரபாஸ் விமான நிலையத்தில் நடந்து சென்ற போது பெண் ரசிகை ஒருவர் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று போட்டோ எடுத்து கொண்டார்.அவரை பார்த்த சந்தோஷத்தில் உணர்ச்சிவசம் பட்ட அந்த பெண் தெரியாமல் பிரபாஸ் கன்னத்தில் பளார் என்று அறைந்து ஓடிவிட்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram