தினசரி சந்தைக்கு வரும் வரத்தை பொறுத்து தான் காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த மாதம் முழுவதும் தக்காளியின் வரத்து குறைவாகவே சந்தைகளில் அதன் விலை அதிகரித்தது. தற்போது, தக்காளியின் வரத்து சீராக மாறவே, காய்ந்த இஞ்சியின் விலை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, இன்றைய விலை நிலவரப்படி கோயம்பேடு சந்தையில், ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 15 ஆகவும், இஞ்சியின் விலை ரூ. 290 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற காய்கறிகளின் ஒரு கிலோ விலை விவரமானது, சின்ன வெங்காயம் ரூ. 70, பெரிய வெங்காயம் ரூ. 30, பீன்ஸ் ரூ. 80, அவரைக்காய் ரூ. 30, கத்தரிக்காய் ரூ. 30, வெண்டைக்காய் ரூ. 20க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் திட்டம்: ரூ.1,000 உரிமை தொகையால் தி.மு.க.வுக்கு பாதகம் உண்டாகுமோ? அதிர்ச்சி தகவல்!!!