சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்ற பாடகி பாம்பே ஜெயஸ்ரீ! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் ஷாக்!!

0
சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்ற பாடகி பாம்பே ஜெயஸ்ரீ! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் ஷாக்!!
சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்ற பாடகி பாம்பே ஜெயஸ்ரீ! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் ஷாக்!!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ:

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா என்ற பாடலை பாடியதன் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமானார் தான் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடல்களைப் பாடி வருகிறார். அந்த வகையில் லண்டனில் நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தார். அப்போது பாம்பே ஜெயஸ்ரீ எதிர்பாராத விதமாக கீழே விழுந்த போது, அவருக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதையடுத்து சுயநினைவை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

MP பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்.., இனி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை !!!

இதை தொடர்ந்து அவரை லண்டனில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், அவருக்கு மூளை கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கோமா stage க்கு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் அவருக்கு தீவிரமாக சிகிச்சை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் 2023-க்கான சங்கீத கலாநிதி விருது பாம்பே ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here