எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது யாருமே எதிர்பாராத வண்ணம் பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ஒருபக்கம் கதிர் திருந்த ஆரம்பிக்க இன்னொரு பக்கம் ஜனனி குடும்பத்தில் விரிசல் ஏற்பட, அதோடு ஆதிரை தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ போராடி வருகிறார்.
சீரியல் இப்படி பல கோணங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது ஜனனியின் அப்பாவாக நாச்சியப்பன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சோம் சௌமியன் என்பவர் குறித்த தகவல் கசிந்துள்ளது.
அதாவது இவர் ‘பொண்ணு வீட்டுக்காரன்’ என்ற படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்துள்ளார். அதுவும் வனிதாவின் தங்கையான ப்ரீத்தாவிற்கு கணவராக நடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வனிதாவின் மச்சானா இவரு என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.