நாடு முழுவதும் உள்ள மக்களின் தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாக இருப்பது வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய பட்ஜெட் தாக்கல் தான். இந்த பட்ஜெட் தாக்கலில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து வெளியிடுவார். இதில், அதிக சம்பளம் பெற்று வரி செலுத்துவோர் 3 வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது,
- பழைய வரி விதிப்பா?? புதிய வரி விதிப்பா?? என குழப்பத்தில் சிக்கி தவிக்கும் வரி செலுத்துபவர்களுக்கு நிலையான வரி விதிப்பு முறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வரிச்சுமையை குறைத்து நிலையான வரி விலக்குகளை அதிகரித்து வழங்குவது குறித்து நிதியமைச்சர் பகுப்பாய்வு செய்வார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
- சேமிப்பு வைப்பு நிதியான PF யின் வரப்பை அதிகரித்து, அதன் வட்டி விகிதத்தையும் உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகளும் மத்திய பட்ஜெட் தாக்கலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.