“கோலங்கள்” சீரியல பண்ண தப்ப இதுல பண்ணமாட்டேன்.., எதிர் நீச்சல் தொடர் end இதான்.., திருமுருகன் பேட்டி!!

0
"கோலங்கள்" சீரியல பண்ண தப்ப இதுல பண்ணமாட்டேன்.., எதிர் நீச்சல் தொடர் end இதான்.., திருமுருகன் பேட்டி!!

இயக்குனர் திருமுருகன் எதிர் நீச்சல் சீரியலை இயக்கி வரும் நிலையில், சமீபத்தில் இவர் இதற்கு முன்னர் இயக்கிய கோலங்கள் தொடர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி பேசியுள்ளார்.

இயக்குனர் திருமுருகன்:

தற்போது சன் டடிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்களை அதிகம் கவர்ந்த தொடர் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த தொடர் பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் அடிமைப்படுத்தும் கட்டமைப்பில் இருந்து அவர்கள் தங்களுடைய சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக படும் போராட்டங்கள் குறித்து தத்ரூபமாக எடுத்து வருகிறார் இயக்குனர் திருமுருகன். இப்பொழுது இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சோலி முடிஞ்சு.., சன் டிவி ஹிட் தொடருக்கு டாடா காட்டிய நடிகை.., பிரியாணி போட்டு வழி அனுப்பி வைத்த சீரியல் டீம்!!

அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் பதறும் அளவிற்கு கதையை எடுத்து வருகிறார் திருமுருகன். இவர் இதற்கு முன்னர் இயக்கிய கோலங்கள் தொடர் மக்களை அதிகம் கவர்ந்தது. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கோலங்கள் சீரியல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, நான் கோலங்கள் சீரியலில் பிஸியாக இருந்தபோது தான் எனக்கு பல படங்களை இயக்க வாய்ப்பு தேடி வந்தது. என்னை போல தான் சமுத்திரக்கனியும் ஒரு சீரியலை இயக்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததும் உதவி இயக்குனர்களிடம் கதையை கொடுத்துவிட்டு நீங்கள் இயக்குங்கள் என்று கூறி சென்றுவிட்டார். அப்படி என்னால கோலங்கள் சீரியல் விட்டு என்னால போக முடியல. அதனால் தான் நான் பட வாய்ப்புகளை இழந்தேன். மேலும் கோலங்கள் சீரியலில் கிடைத்த அன்பை எதிர்நீச்சலிலும் மக்கள் கொடுத்து வருகிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதுமட்டுமின்றி இந்த சிரியலில் மக்களுக்கு சுவாரசியம் இல்லை என்று நினைத்தால், தொடர் முடிவுக்கு வந்துவிடும் என பரபரப்பாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here