ரேஷன் பயனர்களுக்கு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் இலவச உணவு பொருட்கள் விநியோகம் செய்வது குறித்த சூப்பர் அறிவிப்பை உத்தர பிரதேச அரசு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு :
ரேஷன் பயனர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம், உணவுப் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் 80 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன்படி உத்தரபிரதேசத்தில், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி, ஒரு கிலோ தினை 5 கிலோ மதிப்புள்ள இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் அந்தியோதயா காடுதாரர்களுக்கு 14 கிலோ கோதுமை, 20 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ திணை ஆகிய 35 கிலோ மதிப்புள்ள பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த பொருட்கள் அனைத்தும் ஹோலி பண்டிகை முன்னிட்டு வருகிற மாதிரி 5 முதல் மார்ச் 20 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோக மலிவு விலையில் சர்க்கரை வழங்கும் திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த இலவச திட்டத்தின் மூலம் பயனடையும், ஆயிரக்கணக்கான ரேஷன் பயனர்கள் இந்த அறிவிப்பு கேட்டு உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.