சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஜனனி மற்ற மூன்று மருமகளுடனும் பேச ஆரம்பித்து விட்டார். மேலும் ஈஸ்வரி, நந்தினி, ரேணுகாவிற்கு ஜனனி தங்களுக்காக தான் வந்துள்ளார் என்ற விஷயம் தெரிய வந்துள்ளது. இதனால் கண்கலங்குகின்றனர். மேலும் ஜனனி அவர்களையும் எதிர்த்து பேச சொல்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மூன்று பேருக்குமே ஒரு தைரியம் வருகிறது. இந்நிலையில் அடுத்த எபிசோடு பற்றிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது ஜனனி, நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, அப்பத்தா அனைவரும் ஒன்று சேர்ந்ததை தெரிந்து கொண்ட குணசேகரன் கொடூரமான முடிவை எடுக்கிறார். அதாவது இவர்களை ஆரம்பித்திலேயே அடக்கி வைக்க வேண்டும் என்பதற்காக வழக்கம் போல தனது தம்பிகளிடம் தனது நடிப்பை தொடருகிறார்.
உங்க பொண்டாட்டிகளும் அங்க சாஞ்சுட்டாங்க, எல்லாமே கைமீறி போயிடுச்சு, நானும் அம்மாவும் வெளியே போறோம் என்று சொல்வாராம். அண்ணன் மேல் இருக்கும் பாசத்தில் கதிர் நந்தினியை ரூமில் வைத்து அடித்து போடுவாராம். நந்தினி ஜனனி கொடுத்த தைரியத்தில் மீண்டு வருவாரா?? அல்லது கணவர் குழந்தை தான் முக்கியம் என்று அடங்கி போவாரா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.