சராசரி 66 வைத்தாலும் சஞ்சு சாம்சனுக்கு நோ…, பார்மில் இல்லனாலும் ரிஷப் பந்த்க்கு வாய்ப்பு!!

0
சராசரி 66 வைத்தாலும் சஞ்சு சாம்சனுக்கு நோ..., பார்மில் இல்லனாலும் ரிஷப் பந்த்க்கு வாய்ப்பு!!
சராசரி 66 வைத்தாலும் சஞ்சு சாம்சனுக்கு நோ..., பார்மில் இல்லனாலும் ரிஷப் பந்த்க்கு வாய்ப்பு!!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்காததால், சசிதரூர் ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன்:

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய அணி வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். ஆனால், நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றிவிடும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எனவே வெற்றி என்பது இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் இந்த போட்டியில், இந்திய அணியின் ஆடும் லெவனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இது குறித்து, திருவனந்தபுரத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர், சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கத்தார் வேர்ல்ட் கப்பிற்கு வந்த சிக்கல்.., உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

இவர் கூறியதாவது, ரிஷப் பந்த் 4வது வீரராக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால், அணியில் முக்கிய பங்கு வகிப்பதாக பயிற்சியாளர் வி வி எஸ் லட்சுமணன் கூறியுள்ளதை குறிப்பிட்டு, ரிஷப் பந்த் கடைசி 11 போட்டிகளில் பார்மிலே இல்லாத நல்ல வீரர் என பதிவிட்டுள்ளார். மேலும், சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடர்களில் சராசரியாக 66 வைத்துள்ளார். கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும், ரன்களை எடுத்துள்ளார். ஆனால், அவருக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை என பதிவிட்டுள்ளார். இன்றைய போட்டியில் ரிஷப் பந்த் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here