எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது ஆதிரையின் திருமண விவகாரம் தான் விறுவிறுப்பாக ஓடி கொண்டுள்ளது. ஜனனி எப்படியாவது ஆதிரைக்கும் அருணுக்கு திருமணத்தை நடத்தி வைத்து விடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் இப்பொழுது பெரிய ட்விஸ்ட்டாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாவது, குணசேகரன் ஆதிரை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கோவிலுக்கே வந்து விட்டார். ஆனால், ஜனனி மற்றும் சக்தி எப்படியும் அருண் வந்து விடுவார் என்று நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் பெரிய ட்விஸ்ட்டாக குணசேகரன் வந்து ஆதிரையை அடித்து இழுத்து செல்கிறார்.
ஜான்சியும் ஆதிரையை அடித்து இழுத்து செல்கிறார். மேலும் நாடு ரோடில் வைத்து கரிகாலனை ஆதிரை கழுத்தில் தாலி கட்ட சொல்கிறார். ஆதிரை அவ்வளவு மல்லுக்கட்டியும் குணசேகரன் அடங்கவில்லை. ஒரு வேலை இது கனவாக கூட இருக்கலாம். இனி வரும் எபிசோடுகளை வைத்து தான் அடுத்து கதை எப்படி நகர போகிறது என்பதே தெரியும்.