சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டு வருகிறது. ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்றிய குணசேகரன், சக்திக்கு குந்தவையை திருமணம் செய்து வைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் ஜனனி சர்டிபிகேட்டை வாங்குவதற்காக மதுரைக்கு திரும்புகிறார்.
மறுபுறம் குணசேகரன் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் குந்தவை சாப்பாடு பரிமாறுகிறார். அப்போது குந்தவை, குணசேகரனிடம் எனக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகணும் போல் இருக்கு என ஆசையாக கூறுகிறார். இந்த வாய்ப்பை சாதகமாக மாற்றும் குணசேகரன், சக்தியிடம் குந்தவையை கோவிலுக்கு அழைத்து செல்லும்படி கூறுகிறார்.
பிறகு இருவரும் பைக்கில் ஜோடியாக கோவிலுக்கு கிளம்புகின்றன. இதை பார்க்கும் குணசேகரனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இப்படி சுவாரஸ்யமாக நகரத்து கொண்டிருக்கும் சீரியலில் புது ட்விஸ்ட் ஒன்று அரங்கேற உள்ளது.
என்னவென்றால் குந்தவைக்கு இன்னும் கொஞ்ச நாளில் சக்தி மற்றும் ஜனனியின் திருமண விவகாரம் தெரிய வர போகிறதாம். இதனால் கோவமடையும் குந்தவை குணசேகரிடம் சண்டை போடுவாராம். மேலும் வீட்டில் உள்ள பெண்களை அடிமை தனமாக நடத்துவதையும் கண்டிப்பாராம். குணசேகரனும் பதிலுக்கு கை ஒங்க குந்தவைக்கு கோவம் தலைக்கேறி பதிலுக்கு பதில் கை ஓங்கி இதனால் வீட்டில் பெரிய பிரச்சனையே நடக்குமாம். இனிமேல் தான் எதிர்நீச்சல் சீரியலே சூடுபிடிக்கவுள்ளது.