தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 லீக்கில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் அசத்தலான சாதனை ஒன்றை தனது பேட்டிங் மூலம் படைத்துள்ளார்.
இளம் வீரர் படைத்த சாதனை:
சர்வதேச ஆடவர் கிரிக்கெட் அணிகள் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடர் போல, தென் ஆப்பிரிக்காவில் உள்ளூர் லீக்கான CSA டி20 தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று டைட்டன்ஸ் மற்றும் க்நைட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை குவித்திருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், டைட்டன்ஸ் அணியின் டெவால்ட் ப்ரீவிஸ் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்ஸர் உட்பட 162 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இவர் 36 பந்திலேயை சதம் அடித்ததுடன், 52 பந்தில் 150 ரன்களை கடந்த முதல் இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய போது, 175 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார்.
இவரை தொடர்ந்து, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் 172, ஹாமில்டன் மசகட்சா மற்றும் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் தலா 162 ரன்கள் அடித்துள்ளனர். தற்போது இவர்கள் வரிசையில், டெவால்ட் ப்ரீவிஸ் இணைந்துள்ளார். இவர், ஐபிஎலின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.