எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் சொல்லியபடி ஈஸ்வரி கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்கிறார். இதையடுத்து நந்தினி, ரேணுகா, ஜனனி எல்லோரையும் நீதிபதி விடுதலை செய்கிறார். பின் வீட்டுக்கு வரும் இவர்களிடம் நான் இல்லாமல் உங்களால் வாழவே முடியாது என குணசேகரன் சவால் விடுகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஈஸ்வரியே அக்காவை வெளியே எடுக்க ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அடுத்ததாக குணசேகரன் ஞானம், கதிரிடம் உங்கள் பிள்ளைங்க பேரில் இருக்க எல்லா சொத்தையும் என் பேருக்கு முயற்சி தர வேண்டும் என மிரட்டுகிறார். மேலும் தர்ஷினி இப்போது எது நாளும் என் அப்பாவோட முடிவு தான் என்று எனக்கு சாதகமாக தான் பேசுவார். அதனால் நீங்கள் சொத்தை எழுதி தர வேண்டும் என்கிறார். உடனே ஜனனி அப்போ தர்ஷினியை நீங்கதான் கடத்தி வச்சிருக்கீங்களா என்று கேட்க குணசேகரன் ஆடிப் போகிறார். இப்படி நடப்பதை எல்லாம் வைத்து பார்க்கும் போது தர்ஷினியை நிச்சயம் குணசேகரன் தான் கடத்தி வைத்துள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
தமிழகத்தில் சரிய தொடங்கும் பூண்டின் விலை…, ஒரு கிலோவே இப்போ இவ்வளவு தான்…, முழு விவரம் உள்ளே!!