எதிர்நீச்சல் சீரியல் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டுள்ளது. ஜனனியின் அப்பா அவரது குடும்பத்துடன் சேர்ந்து விட்டார். இதனால் ஜனனியின் அம்மா எங்கே போவது என்று தெரியாமல் தவிக்க சக்தி தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இதை வைத்து விசாலாட்சி வீட்டில் ஒரு பிரச்சனை செய்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. விசாலாட்சி குணசேகரன் வந்தவுடன் ஜனனி அம்மா இங்கே தங்கி உள்ள விஷயத்தை சொல்வாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த குணசேகரன் சக்தியிடம் யார் யாரையோ நம்ம வீட்டுல எதுக்கு தங்க வைக்கணும் என்று சொல்லி சத்தம் போடுவாராம். மேலும் ஜனனியின் அம்மாவை பற்றி தரக்குறைவாக பேசுவாராம். இதனால் ஆத்திரமடைந்த ஜனனி குணசேகரனிடம் மல்லுக்கட்ட அவர் அடிக்க கை ஓங்கி விடுவாராம். இதனால் சக்தி என் மனைவியை அடிக்க நீ யாரு என்று குணசேகரன் சட்டையை பிடிப்பாராம்.