ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று (ஜனவரி 2) இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 338 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லிட்ச்ஃபீல்ட் 119 ரன்களும், அலிசா ஹீலி 82 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து, 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனையாக விளையாடிய யாஸ்திகா 6 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். அதன்பிறகு ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் ஆகியோர் ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் பொறுப்பாக விளையாடி அசத்தினர். இதை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட தவறியதால் இந்திய அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
தமிழக மக்களே.., இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!