தேர்தல் முடிவுகள் எதிரொலி – மேற்கு வங்கத்தில் மம்தாவை தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!!

0

அதிகப்படியான இடங்களை வென்று அசுரபலத்துடன் வலம் வருகிற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிபெற்ற மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து வெற்றிபெற்ற எம்.எல்.ஏ கள் இன்று மேற்கு வங்கத்தின்மாநில சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்.

எம்.எல்.ஏ கள் பதவியேற்ப்பு:

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்ட பேரவை தேர்தலில் பா.ஜா.கா வை எதிர்த்து பெரும்பான்மையான இடங்களில் வெற்றி கொடியை நாட்டியது திரிணாமுல் காங்கிரஸ். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் இரும்பு பெண்மணியுமான மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி அடைந்து மேற்கு வங்க முதல்வராகநேற்று பதவியேற்றார்.

எதிர்த்து போட்டியிட்ட பாஜகவை விட பல மடங்கு வாக்குகளை பெற்று முன்னணியில் காணப்பட்டது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏகள் 148. ஆனால் 292 தொகுதிகளில் 200 கும் மேற்பட்ட (213) தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளுமையான வெற்றியை அடைந்துள்ளது. மேலும் வெற்றி அடைந்த முதல்வர் மம்தா பானர்ஜியை தொடர்ந்து எம்.எல்.ஏகள் இன்று பதவியேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here