அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக, தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளது. அமமுகவுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு இல்லாததால் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தேமுதிக தனித்து போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது. தேர்தலுக்கான தொகுதி பங்கீடுகளை பிரிப்பதில் அதிமுக மற்றும் தேமுதிக இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்தது. தொடர்ந்து டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் கூட்டணி வைத்துக்கொள்ள தேமுதிக கட்சியினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மஹாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மார்ச் 15 முதல் ஊரடங்கு உத்தரவு!!
இதுகுறித்து தினகரன் தெரிவிக்கையில், தேமுதிகவுடன் அமமுக பேச்சு வார்த்தை நடந்தது உண்மை தான். விரைவில் முடிவுகள் தெரிவிக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் தேமுதிக கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அக்கட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் போதிய அளவு இடங்கள் கிடைக்காததால் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.