மஹாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மார்ச் 15 முதல் ஊரடங்கு உத்தரவு!!

0

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா:

கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி அனைவரையும் துன்புறுத்தி வருகிறது. சுமார் ஒரு ஆண்டு காலமாகியும் இதன் தாக்கம் குறையவில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளை எடுத்தும் கொரோன கட்டுக்குள் வரவில்லை. தற்போது கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மிகவும் அச்சமடைந்த வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் கொரோனவிற்கான தடுப்பூசியும் வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. இருந்தும் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 13,659 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – முதல்வர் அறிவிப்பு!!

மராட்டிய மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது இதனை தடுக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநகர காவல்துறை அதிரடியாக அறிவித்துள்ளனர். இதனால் மக்கள் தற்போது கவலை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here