தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். சமீபத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆவணத் திரைப்பட போட்டி ஒன்றை காவல்துறையின் மூலம் நடத்தினார். இதில் ஏகப்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு வீடியோவை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் போட்டியில் தேர்வான ஆவணப்படங்களை வெளியிடும் விதமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் சினிமாஸ் திரையரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன் பேசியதாவது, என்னுடைய அப்பாவும் ஒரு போலீஸ் தான்.
தளதளன்னு மின்னும் சந்தன கட்ட மேனியில் தரமான ஒரு லுக் கொடுத்த பிரணிதா.., ரசிக்கும் இளசுகள்!!
அவரை போல நானும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆகணும் தான் என்னோட கனவாக இருந்தது. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. சாலையில் செல்லும் போது சிக்னல் போட்டால் நின்று தான் செல்வேன். அதுமட்டுமின்றி சாலை விதிமுறைகளை மதித்து நடப்பேன் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ஆவணப்படங்கள் குறித்து பேசி உரையை முடித்துக் கொண்டார்.
View this post on Instagram