படப்பிடிப்பில் நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம்.., முதலுதவி செஞ்ச படக்குழு!!

0
படப்பிடிப்பில் நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம்.., முதலுதவி செஞ்ச படக்குழு!!
படப்பிடிப்பில் நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம்.., முதலுதவி செஞ்ச படக்குழு!!

நடிகர் அக்‌ஷய்குமார் ‘படே மியான் சோட்டே மியான்’ என்ற இந்தி படத்தில் நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அக்‌ஷய்குமார்:

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அக்‌ஷய்குமார். 90ஸ் காலகட்டத்தில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது வரை முன்னணி வகித்து வருகிறார். ஆரம்பத்தில் 3 படங்களில் நடித்து ஹிட் கொடுத்த பின்னர் நடிகை ட்விங்கிள் கன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இவர் ஹீரோவாகவும், ட்விங்கிள் கன்னா தயாரிப்பாளராகவும் சினிமாவில் வலம் வருகிறார்கள். இதனை தொடர்ந்து ‘படே மியான் சோட்டே மியான்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் அக்‌ஷய்குமார் காயம் ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் இந்த சீரியல் இனி ஒளிபரப்பாகாது…, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சீரியல் குழு!!

அதாவது, நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கும் அந்த படத்தில் நடிகர் டைகர் ஷெராப் உடன் சண்டையிடும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்ப்பாராத விதமாக அக்‌ஷய்குமார் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த படக்குழுவினர் உடனே அவருக்கு முதலுதவி செய்து சிகிச்சை அளித்தனர். இதனால் படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here