
இயக்குனர் செல்வராகவன் நடித்த பகாசூரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் செல்வராகவன்:
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக அங்கீகாரம் பெற்றவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை , மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 வை எடுத்து வருகிறார் செல்வராகவன். அதுமட்டுமின்றி இப்பொழுது இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பகாசூரன் திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த நிலையில் கருத்துள்ள விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
தமிழக பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்., முதன்மை கல்வி அலுவலர் திடீர் உத்தரவு!!
தற்போது ஒரு கருத்தையும் வெளியிட்டுள்ளார். அதாவது அந்த பதிவில், காசு கைகளில் இருந்தால் மட்டுமே நீங்கள் நினைப்பது நிஜமாகும் . அதற்கு முன்பு கனவு காண ஆரம்பிக்காதீர்கள். அதுமட்டுமின்றி செலவுகளை திட்டமிட வேண்டாம்.., இது என்னுடைய அனுபவம். தத்துவம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம்!!
அனுபவம். தத்துவம் அல்ல !!
— selvaraghavan (@selvaraghavan) March 8, 2023