தமிழகத்தில், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் மட்டும் மற்ற மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்கும் நேரம் மாற்றப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்வித்துறை அறிவிப்பு :
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இந்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது இந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, பொது தேர்வு நடைபெறும் நாட்களில் பொதுத்தேர்வு மாணவர்கள் போக மற்ற மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் இயங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு., பயனர்களுக்கு அரசு வைத்த முக்கிய வேண்டுகோள்!!
அதாவது தேர்வு நடைபெறும் நாட்களில் மட்டும் எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதியம் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு தகுந்த படி, அந்தந்த பள்ளிகள் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது