சூர்யாவுக்கு டாடா காட்டி சிவகார்த்திகேயனுக்கு கொக்கி போட்ட இளம் இயக்குனர்., இது நம்ம லிஸ்டுலயே இல்லையே!!

0
சூர்யாவுக்கு டாடா காட்டி சிவகார்த்திகேயனுக்கு கொக்கி போட்ட இளம் இயக்குனர்., இது நம்ம லிஸ்டுலயே இல்லையே!!
சூர்யாவுக்கு டாடா காட்டி சிவகார்த்திகேயனுக்கு கொக்கி போட்ட இளம் இயக்குனர்., இது நம்ம லிஸ்டுலயே இல்லையே!!

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அடுத்து எடுக்க இருக்கும் படத்தை குறித்து சோசியல் மீடியாவில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் ரவிக்குமார்:

தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த கொஞ்ச காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் ரவிக்குமார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் இப்படமே முதல் டைம் மிஷின் திரைப்படம் என்றால் அது மிகையாகாது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை ரவிக்குமார் இயக்க இருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவின. ஆனால் சில பல காரணத்தால் அப்படம் டிராப் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் ஹீரோவாகும் சூரி., பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்? அதுவும் இவங்க படத்துலையா?

தற்போது அயலான் படத்தை தொடர்ந்து யாருடன் ரவிக்குமார் இணைய போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் ரவிக்குமார் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here