மும்பை அணியின் வீரரை எச்சரித்த தேர்வு குழு உறுப்பினர்…, இந்திய அணியில் இடம் கிடைக்காததால் நடந்த சம்பவம்!!

0
மும்பை அணியின் வீரரை எச்சரித்த தேர்வு குழு உறுப்பினர்..., இந்திய அணியில் இடம் கிடைக்காததால் நடந்த சம்பவம்!!
மும்பை அணியின் வீரரை எச்சரித்த தேர்வு குழு உறுப்பினர்..., இந்திய அணியில் இடம் கிடைக்காததால் நடந்த சம்பவம்!!

இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வரும் மும்பை வீரர், சர்வதேச அணியில் இடம் கிடைக்காததால் இவர் செய்யும் செயல்களை குறித்து தேர்வு குழு எச்சரித்து உள்ளது.

சர்பராஸ் கான்:

ஐபிஎல் தொடரில், பெங்களூர், பஞ்சாப், மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட அணிகளில் கடந்த 2015 ஆண்டு முதல் சர்பராஸ் கான் விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் தொடரில், இதுவரை 46 போட்டிகளில் 532 ரன்களை எடுத்துள்ளார். இந்தியாவின் ஐபிஎல் மற்றும் சில உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வரும் இவர், சர்வதேச இந்திய அணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இவர் இடம் பெறாத நிலையில், ரஞ்சி தொடரில் தொடர்ந்து சதங்களை அடித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி சில கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், மும்பை அணியின் தேர்வு குழு உறுப்பினர், மிலிந்த் ரேஜ், சர்பராஸ் கானுக்கு எச்சரிக்கை விடுத்தும் சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளார்.

இரு ஜாம்பவானுக்கு இடையே நடந்த போட்டி.., மெஸ்ஸியிடம் வீழ்ந்த ரொனால்டோ…, கெத்து காட்டிய PSG!!

அதாவது, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். ஆனால், தேவையில்லாத கருத்தை வெளிப்படுத்தாதீர்கள் என்று எச்சரித்துள்ளார். மேலும், பேட்டிங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்துங்கள். இந்திய அணியில் உங்களுக்கான இடம் வரும் வரை காத்திருங்கள் என்று கூறியுள்ளார். சர்பராஸ் கான் நடப்பு டிராபியில் மட்டும் 556 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here