ஐஸ்வர்யா ரஜிகாந்த் வீட்டில் மேலும் 43 சவரன்களை பறிமுதல் செய்த காவல்துறை – தொடரும் விசாரணை!!

0
ஐஸ்வர்யா ரஜிகாந்த் வீட்டில் மேலும் 43 சவரன்களை பறிமுதல் செய்த காவல்துறை - தொடரும் விசாரணை!!
ஐஸ்வர்யா ரஜிகாந்த் வீட்டில் மேலும் 43 சவரன்களை பறிமுதல் செய்த காவல்துறை - தொடரும் விசாரணை!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடிய பணிப்பெண்ணிடம் 100 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் மேலும் 40 நகைகள் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

சூப்பர் ஸ்டார் மூத்த மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா வீட்டில் கடந்த வாரம் 60 பவுன் நகைகள் காணாமல் போகின. இதுகுறித்து போலீசிடம் புகார் தெரிவித்த நிலையில், அவர் வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி, வெங்கடேசன் திருடியது தெரியவந்தது. அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போது அவர்கள் 100 பவுன் நகைகளை திருடியது அம்பலமாகியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் பணிப்பெண் ஈஸ்வரி நான் ஐஸ்வர்யாவின் பினாமி என்று சொல்லி வழக்கை வேறு கோணத்தில் திருப்பி விட்டார். மேலும் ஐஸ்வர்யா 60 பவன் காணவில்லை என்று தான் புகார் அளித்திருந்தார். ஆனால் காவல்துறை அவர்களிடம் இருந்து கைப்பற்றியது 100 பவுன் நகைகள். இது குறித்து ஐஸ்வர்யாவிடம் கேட்ட போது, அதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, என் நண்பர்கள் பரிசு கொடுத்தாக இருக்கலாம் என்று கூறி மழுப்பியுள்ளார்.

மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான அஸ்திவாரம் போட்டாச்சு., வெளிவந்த முக்கிய தகவல்!!!

இதனால் அவர் வீட்டிற்கு வருமான துறை ரைடு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூட சமீபத்தில் சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரையும் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் அவர்களிடம் இருந்து மேலும் 43 பவுன் நகைகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here