என்னடா சொல்றீங்க.., பிளாப் நாயகனுக்கு இத்தனை கோடி சம்பளமா? வாரிசு நடிகராக இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?

0
என்னடா சொல்றீங்க.., பிளாப் நாயகனுக்கு இத்தனை கோடி சம்பளமா? வாரிசு நடிகராக இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?
என்னடா சொல்றீங்க.., பிளாப் நாயகனுக்கு இத்தனை கோடி சம்பளமா? வாரிசு நடிகராக இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?

சியான் விக்ரம் மகனாக சினிமாவில் அறிமுகமான துருவ் விக்ரம் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். தமிழ் சினிமாவில் இவர் நடித்த ஆதித்யா வர்மா, மகான் ஆகிய படங்கள் நினைத்த அளவுக்கு ஹிட் ஆகவில்லை. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தார். இந்த சூழலில் தான் இவர் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க கமிட்டானார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், இயக்குனர் மாரி செல்வராஜ் அதற்குள் உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்க சென்று விட்டார். இதனால் நீண்ட மாதங்கள் அவருக்காக வெயிட் செய்த துருவ் விக்ரம் மற்ற இயக்குனர்களிடம் கதையை கேட்க தொடங்கிவிட்டார். அதன்படி இப்போது இவர் டாடா பட இயக்குனர் கணேஷ் பாபுவுடன் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார். மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ச்சே.., நடிகையை பார்த்தாலே இதைத்தான் கேட்பீர்களா?? வெளுத்து வாங்கிய எதிர்நீச்சல் நடிகை!!

கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியான டாடா படம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், இப்போ இந்த படமும் வெற்றி அடையுமா?? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இந்த படத்திற்காக துருவ் விக்ரம் 5 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் பிளாப் நடிகருக்கு இப்படி ஒரு மவுஸா?. இந்த வாய்ப்பையாச்சும் கெட்டியா புடிச்சுக்குவாரா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here