IPL 2023 தொடருக்கான இறுதி போட்டிக்கு CSK மற்றும் GT அணிகள் முன்னேறியது. இரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் போட்டியை பார்க்க ஆவலுடன் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் மழை காரணமாக தாமதமான போட்டி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் IPL நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நேற்றைய போட்டியில் பங்குபெற்ற ரசிகர்கள் பலர் டிக்கெட்டை தவறவிட்டுள்ளனர். இதனால் டிக்கெட் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் IPL நிர்வாகம், ரசிகர்கள் அனைவரும் ஆன்லைன் டிக்கெட் வைத்திருந்தாலும் கண்டிப்பாக கையில் ஒரிஜினல் டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்த அறிவிப்பால் டிக்கெட் இல்லாத ரசிகர்கள் செய்வதறியாமல் குழம்பி போய் உள்ளனர்.