ஐபிஎல் தொடரில் இது வரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற பெருமையை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பெற்றுள்ளார். தற்போது இவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல்:
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டு தோறும் ஐபிஎல் தொடருக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருப்பர். அந்த அளவிற்கு ரசிகர்களிடம் ஐபிஎல் தொடர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 2 வது வாரத்தில் தொடங்கவுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் 18ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதற்காக அனைவரும் காத்து வருகின்றனர். தற்போது ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கியவர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனி அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து 2020ம் ஆண்டு வரை சுமார் 137 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார்.
காரசாரமான ஆம்பூர் சிக்கன் கிரேவி ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு இவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளமாக சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் மட்டும் இவர் மொத்தமாக 152 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.