மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல்:
கடந்த சில நாட்களாக பலருக்கும் இந்த கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது முக்கிய அமைச்சர்கள், தலைவர்கள் என்று எல்லாருக்கும் பரவி வருகிறது. 2 நாட்களுக்கு முன் தான் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மந்திரி சபை:
அடுத்ததாக, தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த புதன் கிழமை தான் மந்திரி சபை ஒன்றில் பங்கேற்றார். அதில், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அங்கு, பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனாலும், இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது , இதனால், மந்திரி சபையில் பங்கேற்ற அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தலைவர்களுக்கு கொரோனா பரிசோதனை:
இது வரை ஜல் சக்தி மந்திரி கஜேந்திர சிங் சேகாவத் கொரோனா தொற்று இல்லை என்று தான் பரிசோதனை வந்துள்ளது. அதே போல், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சுய தனிமைக்கு சென்றுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி புறப்பட்டார்!!
தற்போது, அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் தவிர்த்து கர்நாடக முதலமைச்சர், எடியுரப்பா , மத்திய பிரதேஷ் முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் ஆகியோர் தங்கள் சொந்த ஊர்களில் கொரோனாக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
#COVID19 के लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया जिसमें मेरी रिपोर्ट पॉज़िटिव आई है। डाक्टरों की सलाह पर मैं अस्पताल में भर्ती हूँ और स्वस्थ हूँ।
— Dharmendra Pradhan (@dpradhanbjp) August 4, 2020
தர்மேந்திர பிரதான் தனது கூறியதாவது” நான் நலமாக தான் உள்ளேன். ஆனாலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னை தனிமை படுத்தி கொண்டேன். மருத்துவர்களின் அறிவுரை படி நடக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த பாதிப்பு மூலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரெண்டாவது மத்திய அமைச்சர் இவர் தான்.