லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் என தகவல் வெளியாகியுள்ளது.
2,750 டன் அம்மோனியம் நைட்ரேட்..!
மேற்குஆசிய நாடான லெபானின் தலைநகர் பெய்ரூட் நகரில் துறைமுகம் மற்றும் வேர்ஹவுஸ் என இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் குலுங்கியுள்ளன. நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது. குண்டு வெடித்த நிகழ்வு வீடியோவாக ஏ.என்.ஐ. ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இதில் 73 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த சம்பவம் குறித்து லெபனான் பிரதமர் ஹசன் தியாப் கூறியதாவது, தலைநகரையே அழிக்க திட்டமிட்டு மிகப்பரெிய குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தியுள்ளனர். இதில் 2,750 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் என்ற வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி புறப்பட்டார்!!
மேலும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஒரு கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ஏற்றுமதி செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.