சேலையில் அடக்க ஒடுக்கமாக வந்த தேவையானியா இது? – பயங்கர மாடலான தோற்றத்தில் வெளியான புகைப்படம்!!

0

குடும்ப பெண்ணாகவே இத்தனை ஆண்டுகளாக வளம் வந்து கொண்டிருந்த தேவயானி தற்போது மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மாடர்ன் உடையில் தேவயானி:

நடிகை தேவயானி 1990களில் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்தவர். அதற்கு பிறகு இவர் சின்னத்திரையிலேயே கவனம் செலுத்தி வருகிறார். முத்தாரம், ராசாத்தி, கோலங்கள், கொடி முல்லை, மஞ்சள் மகிமை, தேவயானி ஆகிய சீரியல்களில் நடித்தார். தற்போது ஜீ தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புது புது அர்த்தங்கள் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த தொடரில் சந்தோஷின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

சீரியலிலும் சரி வெளி உலகிற்கும் சரி எப்பொழுதும் குடும்ப பாங்காக சேலையிலேயே வலம் வருபவர் இவர். இந்த நிலையில் புது புது அர்த்தங்கள் தொடரில் தனது மருமகள் கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்வதியுடன் இணைந்து ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் தேவயானி மாடர்ன் உடையில் படு இளமையாக தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்த பலரும் யார் மாமியார் யார் மருமகள் என குழப்பமாகிறது என்றும் தேவயானி 1990ஸ் காலத்துக்கே சென்று விட்டார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here