டெல்லி விவசாயிகள் போராட்டம் – ஒருவர் உயிரிழப்பு!!

0

டெல்லியில் தற்போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி போராடி வருகின்றனர். இதில் போலீசார் நடத்திய தடியடியில் விவசாயி ஒருவர் பரிதாபமாக தனது உயிரை இழந்துள்ளார்.

டெல்லி:

இன்று நாட்டின் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் சுமார் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் அரசு, விவசாயிகள் தரப்பு கருத்திற்கு ஒத்துப்போகவில்லை. இதனால் போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் இதுவரை அரசிற்கும் விவசாயிகளுக்கும் இடையே சுமார் 12 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

டெல்லி செங்கோட்டை முற்றுகை, தேசியக் கொடி அகற்றம் – தீவிரமடையும் போராட்டம்!!

இன்று குடியரசு தின விழா என்பதால் விவசாயிகள் டெல்லியில் செங்கோட்டையை நோக்கி டிராக்டர் பேரணியை நடத்தி செங்கோட்டையை முற்றுகை இட்டனர். இதனை தடுக்கும் வண்ணத்தில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி ஐடிஓ பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். மேலும் டிராக்டர் பேரணியில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீஸ் தடியடி நடத்தியதால் அதில் விவசாயி நவநீத் என்பவர் பரிதாபமாக தனது உயிரை இழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here