இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் காலாவதியாகும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு மாற்றிக் கொடுக்க இயலாமல் வங்கிகள் திணறி வருகின்றன.
காலாவதியாகும் கார்டுகள்:
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால் வங்கிகள் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த மாதம் காலாவதியாகும் தங்களது வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை மாற்றிக் கொடுக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன.
இதற்கு கூரியர் சேவைகளில் ஏற்பட்டுள்ள தடையே காரணமாக கூறப்பட்டு உள்ளது. ஏப்ரல் 20க்கு பிறகு அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையிலும், உள்ளூர் அதிகாரிகள் அதனை அனுமதிக்கவில்லை என புகார்கள் எழுந்து உள்ளது.
வங்கி அதிகாரிகளின் விளக்கம்:
கடந்த 2015ம் ஆண்டு வழங்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இந்த வருடம் காலாவதியாகும். அந்த வகையில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 1.5 கோடி கார்டுகள் காலாவதியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலாவதியாகும் தேதியை தொழில்நுட்ப ரீதியாக நீட்டிப்பது கடினம் என்றும் பணமில்லா பரிவர்த்தனை மற்றும் விர்சுவல் கார்டு முறைகள் தான் பயன்படுத்த முடியும் என கூறப்பட்டு உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வங்கிகளை தான் நாட வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |