சீனாவில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் – வகுப்பறையில் ஆசிரியர்கள் & மாணவர்கள் எப்படி இருக்காங்கனு பாருங்க..!

0

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை கொரோனா வைரஸ் கடுமையாக தாக்கி உள்ளது. இந்நிலையில் சீனாவில் இதன் தாக்கம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. இதனால் 3 மாதங்களுக்குப் பிறகு அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு உள்ளது.

75 நாட்கள் ஊரடங்கு:

சீனாவில் கொரோனா தாக்கம் கண்டறியப்பட்ட பிறகு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சமூக விலகல் தான் இதற்கு ஒரே தீர்வாக இருந்தது. மக்கள் வீட்டினுள்ளே முடங்கினர். கிட்டத்தட்ட 75 நாட்கள் ஊரடங்கு அங்கு கடுமையாக பின்பற்றப்பட்டது. இதன் விளைவாக அங்கு கொரோனாவின் தாக்கம் முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதால் அங்கு 3 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு சமூக விலகலை கடைபிடிக்கும் வகையிலும் வைரஸ் மீண்டும் பரவக் கூடாது என்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு தனித்தனியாக அமர வைக்கப்பட்டு உள்ளனர்.

பள்ளியினுள் நுழைவதற்கு முன்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே வகுப்பறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் வகுப்பறையில் உள்ள மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் இன்னும் 15 நாட்கள் பின்பற்றப்படும் என சீன அரசு தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here