தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் சிறந்து விழங்கும் கலைஞர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும். தற்போது 2020 ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் நடிகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தாதா சாகேப் பால்கே:
இந்தியா சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர் தான். முந்தைய காலங்களில் கருப்பு வெள்ளையாக மட்டுமே படங்கள் வெளியாகும். மேலும் அவை அனைத்தும் ஊமை படங்களே. இவர் தனது தீவிர முயற்சியால் சினிமா கதை எழுதி தானாகவே இயக்கினார்.
அதுமட்டுமல்லாமல் தனது குடும்பத்தில் உள்ள 18 நபர்களையும் நடிக்க வைத்தார். மேலும் இவர் இயற்றியது தான் முதல் இந்தியா குடும்ப படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது நினைவாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!
தற்போது 2020கான தாதா சாகேப் பால்கே விருதுக்கான நடிகர்களின் பெயர் வெளிவந்துள்ளது. இந்த விருது தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும். தற்போது இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர்கள் பட்டியலில் அசுரன் படத்தின் கதாநாயகன் தனுஷ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
அடுத்து இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருது ராட்சசி பட கதாநாயகி ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பன்முக ஆற்றல் கொண்டவராக அஜித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக டூ லெட் என்னும் படம் தேர்வு செய்யப்பட்டுள்ள்ளது. இந்த படத்தை செழியன் இயக்கியுள்ளார். மேலும் சிறந்த இயக்குனராக ஒத்த செருப்பின் இயக்குனர் பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.