கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் தங்கம் வாங்குவதற்கு தயங்கி வருகிறது. மேலும் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
தங்கம்:
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். கடந்த ஆண்டு கொரோனா காலங்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. அதன் பின்பு சிறிய அளவில் விலை குறைந்தாலும், தற்போது சில நாட்களாகவே தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் தங்க நகைகள் வாங்குவதற்கு தயங்கி வருகின்றனர்.
கண்ணம்மா சென்னையில் இருக்கும் விஷயத்தை சொல்லிவிடும் துளசி – சந்தோஷத்தில் சௌந்தர்யா!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்றய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவுரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. எனவே தற்போது சென்னையில் 1 சவுரன் ரூ.37,984க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூ.13 உயர்ந்து தற்போது ரூ.4,748க்கு சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இன்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை சிறிய அளவு குறைந்துள்ளது. இன்று வெள்ளியின் விலை 130 காசுகள் குறைந்து 1 கிராம் ரூ.72க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.72,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.