வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெஜ்1பி விசா உட்பட அனைத்து வீசாக்களுக்கும் கடந்த ஆண்டு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையை வரும் மார்ச் மாதம் வரை நீடிப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் உள்ள பணியாளர்கள் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா:
கடந்த ஆண்டு கொரோனா ஆண்டாக அமைந்தது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைராசல் பெரிதும் பாதிப்பு அடைந்தது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா நாடு லட்சக்கணக்கான உயிர் சேதத்தை சந்தித்துள்ளது. அந்நாட்டில் இன்னும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்கா மக்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் பலர் தங்களது வேலையை இழந்தனர். மேலும் அமெரிக்காவில் பணி புரியும் இந்தியர்கள் பலர் தங்களது வேலை இழந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த ஆண்டே அமெரிக்கா அரசு 2 முறை வெளிநாட்டு பணியாளர்களுக்கு வீசா வழங்குவதை நிறுத்திவைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அமெரிக்கர்கள் அதிகம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர். இந்த நிலையை சரியாக்குவதற்காக அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஓர் அதிரடி முடிவை எடுத்துள்ளார். தற்போது வெளியான அறிக்கையின் படி வெளிநாட்டு பணியாளர்கள் பயன்படுத்தும் ஹெஜ்1பி மற்றும் அது போன்ற வீசாக்களுக்கு வரும் மார்ச் மாதம் வரை தடை நீடிப்பு என்று அறிவித்துள்ளார்.
குஜராத்தில் திடிரென்று தோன்றிய மர்ம தூண் – செல்பீ எடுக்க குவியும் மக்கள்!!
இதன் மூலம் இந்தியா ஐடி பணியாளர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் பணி புரிவதற்காக கனவு காண்போர்களின் ஆசை கனவாகவே போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னும் 2 வாரங்களில் டிரம்ப் ஆட்சி காலம் முடியும் நிலையில் இவர் இந்த முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த அதிபராக பதவி ஏற்க காத்திருக்கும் ஜோ பைடன் கூறியதாவது,” தான் அதிபராக பதவி ஏர்தவுடன் வீசா கட்டுப்பாடுகளை நீக்கிவிடுவேன்” என்று கூறியுள்ளார். இதனால் இந்தியா மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்..