தனத்தின் கர்ப்பத்தை விழாக்கோலமாக கொண்டாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – குஷியில் ரசிகர்கள்!!

0

ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனம் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அனைவர்க்கும் தெரிந்த பிறகு விழாக்கோலமாக கொண்டாடுகின்றனர். மேலும் முல்லைக்கு எப்பொழுது குழந்தை என்றும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து பல பிரச்சனைகளே வீட்டில் நடந்துகொண்டிருந்தது. தனத்தின் அம்மாவும் குழந்தை இல்லை என்ற வருத்தத்தில் கோவித்துக்கொண்டு சென்றிருந்தார். மீனாவும் கோவித்துக்கொண்டு அவரின் வீட்டிற்கு சென்றார்.

ஜீவா திரும்ப வீட்டிற்கு வர நடந்த பிரச்சனையில் மூர்த்தி அனைத்து உண்மைகளையும் போட்டு உடைக்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாகிறது. மீனாவும் விஷயம் தெரிந்து ஓடி வருகிறார். தனத்தின் அம்மா அண்ணனுக்கு தகவல் அனுப்ப ஒட்டுமொத்த குடும்பமும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர்.

குஜராத்தில் திடிரென்று தோன்றிய மர்ம தூண் – செல்பீ எடுக்க குவியும் மக்கள்!!

தனத்திற்கு இதனை ஒரு நலங்கு விழா போல வைக்க வேண்டும் என அனைவரும் திட்டமிடுகின்றனர். மேலும் ஜீவாவின் அம்மாவும், தனத்தின் அம்மாவும் அமர்ந்து பேச அன்றைக்கு கோவிலில் நீங்க மூர்த்தியை தம்பிங்க முன்னாடி அப்டி பேசி இருக்க கூடாது என்று சொல்ல தனத்தின் அம்மாவும் மன்னிப்பு கேட்கிறார்.

அப்பொழுது கதிரும் கண்ணனும் வீட்டை அலங்கரிக்க தோரணத்துடன் வருகின்றனர். அங்கே வீட்டில் பின் பக்கம் முல்லை எதையோ யோசித்துக்கொண்டுள்ளார். என்ன என்று கதிர் கேட்க முல்லையிடம் அனைவரும் எப்பொழுது உனக்கு குழந்தை என்று கேட்டது தான் என்று முல்லை கூறுகிறார்.

இதை நெனச்சு எல்லாம் கவலை படாத. இப்போதான் கயல் பாப்பா வீட்டிற்கு வந்திருக்கா. அண்ணிக்கு குழந்தை பிறக்க போகுது அடுத்து பொறுமையா நம்ம பெத்துக்கலாம் என்று சொல்ல முல்லைக்கு வெக்கம் வருகிறது. எப்போதும் போல இப்படி சிரிச்சிகிட்டே இருந்தா தான் எனக்கு சந்தோசம் என்று கதிர் சொல்லிவிட்டு செல்கிறார்.

மேலும் தனத்தை அலங்கரித்து நலங்கு வைக்க உட்கார வைக்கின்றனர். தனத்திற்கு இது புதுசு என்பதால் வெக்கப்பட்டு கிச்சனுக்கு செல்கிறார். அப்பொழுது உள்ளே வரும் ஜனார்த்தனன் வாழ்த்து தெரிவிக்க மீனாவை தனியே அழைத்து சென்று வீட்டிற்கு வர சொல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மீனா இது தான் என் வீடு இங்க இருந்து வந்தா ஜீவா என் கூட நிம்மதியா வாழ மாட்டான் என்று சொல்ல ஜனார்த்தனன் அப்போ அப்போ வந்து பாத்துக்கோங்க என்று சொல்ல மீனா விடாப்பிடியாக மறுக்கிறார். இதனால் கோவமடையும் ஜனார்த்தனன் வெளியே செல்கிறார்.

அடுத்து மீனா கிச்சனுக்கு செல்ல தனம் அங்கு வெக்கப்பட்டு வர மறுக்கிறார். அப்பொழுது கண்ணனும் உள்ளே வர இத்தனை நாள் அண்ணா அண்ணிக்கு சமைச்சு தரது என்ன, கால் அமுக்கி விடுறது என்ன ஒரே கவனிப்பு தான் என்று சொல்ல தனத்திற்கு வெக்கமாகிறது. இத்தோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here