தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால் ஓராண்டிற்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு தெரிவித்து உள்ளது.
அரசாணை வெளியீடு:
ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் என ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த ஒரு ஆண்டிற்கு இது நிறுத்திவைக்கப்டுகிறது. இந்த உத்தரவு மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈட்டிய விடுப்பிற்காக விண்ணப்பித்து இருந்தால் அதுவும் நிறுத்திவைக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரசுக்கு செலவுகள் கணிசமாக குறையும் எனவும் அது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |