30 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 2 லட்சத்தை தாண்டிய உயிர்பலி – உலக நாடுகளில் கொரோனா ரிப்போர்ட்..!

0

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர்.

2 லட்சத்தை தாண்டிய பலி..!

உலகளவில் இதுவரை 3,004,116 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 207,118 ஆக உள்ளது. மேலும் இதுவரை 882,772 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் அமெரிக்கா தான் கொரோனா தாக்கத்தில் அதிக பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகளுடன் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகள் ரிப்போர்ட்:

அமெரிக்காவில் இதுவரை 987,322 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 55,415 பேர் உயிர் இழந்துள்ளனர். இத்தாலியில் 197,675 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 26,644 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ஸ்பெயினில் 226,629 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 23,190 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. அங்கு 82,830 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 4,632 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் இந்த வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 157,770 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 5,976 பேர் உயிர் இழந்து உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் 162,100 பேர் பாதிக்கப்பட்டும் 22,856 பேர் உயிரிழந்து உள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை 152,840 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 20,732 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here