நாளை நடைபெற இருக்கும் 13 வது ஐபிஎல் போட்டியில் முதலாவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோத உள்ளனர். இதில் நாளை நடைபெற இருக்கும் இந்த போட்டியில் எந்த எந்த வீரர்கள் சென்னை அணி சார்பாக விளையாடுவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள்:
நாளை துபாயில் 13 வது ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இதில் சென்னை மற்றும் மும்பை அணி மோத உள்ளனர். இரு அணிகளுமே பெரிதாக பேசப்படும் அணிகள். நாளை நடைபெற போகும் போட்டிகளுக்கு இப்போதே சமூகவலைத்தளங்களில் போட்டி ஆரம்பித்து விட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அனைவரும் எதிர்பார்க்கும் இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் எந்த எந்த வீரர்கள் விளையாடுவர் என்ற விவரம் தெரியாமல் பலரும் தங்களது கணிப்புகள்படி வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர். தற்போது அணியின் முக்கிய வீரர்களாக கருதப்பட்ட ரெய்னா மற்றும் ஹர்பாஜன் சிங் இல்லாத நிலையில் வீரர்கள் பட்டியல் தெரியாமல் ரசிகர்கள் தவித்து வந்தனர். முந்தய ஆண்டுகளின் கணிப்புகள்படி எந்த எந்த வீரர்கள் விளையாடுவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
யார் யார் அணியில்?
தொடக்க வீரராக ஆஸ்திரேலியா அணியின் வீரர் வாட்சன் மற்றும் முரளி விஜய் களம் இறங்கலாம். இரண்டவது சுற்றில் தென்னாப்பிரிக்க வீரர் டுப்லெஸிஸ் இடப்பெற வாய்ப்புண்டு. துணை கேப்டன் இல்லாததால் அவர் இறங்கலாம்.
சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் – கொதிப்பில் ரசிகர்கள்!!
இவர்களை தொடர்ந்து அம்பத்தி ராயிடு, கேப்டன் தோனி களம் இறங்கலாம். 6 வது இடத்தில் ஆல் ரௌண்டராக கருதப்படும் பிராவோ களம் இறங்கலாம். இவர்களை அடுத்து ஜடேஜா, பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர்பி போன்ற வீரர்கள் களம் இறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் வீரர்கள் களத்தை சந்திப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று இரு அணிகளும் தீவிரமாக இருக்கின்றனர்.