பாகிஸ்தானில் வசிப்பதாக கூறப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று:
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். பாகிஸ்தானிலும் இதன் தாக்கம் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட காரணத்தால் அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
பூமியை நெருங்கும் 5 ராட்சச விண்கற்கள் – நாசா எச்சரிக்கை
மும்பையில் பிறந்த தாவூத் இப்ராஹிம், இந்திய நாட்டிற்குள் வெடி பொருட்களை கடத்துதல் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்துதல் என தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். 1993ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு முக்கிய மூளையாக செயல்பட்டது தாவூத் இப்ராஹிம்.
இத்தகைய பயங்கரவாத செயல்களுக்காக இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிம், பாகிஸதானில் கராச்சி பகுதியில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாவூத் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.