தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா:
- தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1204 பேர்
- இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை – 12 பேர்
- இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 81 பேர்
- வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை – 38,722 பேர்
- அரசு கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை – 135 பேர்
- 28 நாள் கண்காணிப்பு நிறைவடைந்தவர்கள் எண்ணிக்கை – 68,519 பேர்
- இதுவரை வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 15,502 பேர்
தமிழக்த்தில் இதுவரை 10 வயதுக்கு உட்பட்ட 33 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |