கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் எவ்வளவு தான் சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டாலும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் அதனை கண்டிப்பாக முறியடிக்கலாம். அதற்கு நம் உணவு பழக்கமே மிக முக்கியமானது. கொரோனவை தடுக்க என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும் என சில பட்டியல்கள் உள்ளன.
முன்னெச்சரிக்கை
கொரோனா முதலில் சளி மூலமே பரவுகிறது. எனவே முடிந்தவரை குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. 5 நிமிடத்திற்கு ஒரு முறை கை கால்களை கழுவி கொண்டே இருங்கள்.தனித்தனியாக சோப்பை உபயோகப்படுத்த பழகுங்கள். ஹாண்ட் வாஷ்களை திரவியமாகவே வாங்குங்கள்.
வெளியில் சென்று வந்ததும் கை கால்களை 3 அல்லது 4 முறை கழுவி விட்டு அடுத்த வேலையை செய்யவும். முடிந்தவரை முகக்கவசம் அணிந்தே வெளியில் செல்லவும். கூடுமானவரை நண்பர்கள் உறவினர்களுக்கு கை கொடுப்பதை தவிர்க்கவும். யாருக்கேனும் சளி அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களிடம் சற்று விலகியே இருங்கள். மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்வதை கொஞ்சம் தவிருங்கள்.
உணவுகள்
கொரோனா முதல் 4 நாட்களுக்கு நம் கழுத்திலேயே தங்கி இருக்கும். பிறகு தான் அது கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பிக்கும். நாம் ஆரம்பக்கட்டத்திலேயே கொரோனவை கண்டறிந்தால் அதிலிருந்து சுலபமாக வெளிவரலாம். நம் கழுத்திலிக்கும்போதே சளியை போக்கும் சில மருந்துகளை உட்கொள்வதால் அதனின் வீரியம் குறைகிறது
பிற நாட்டு பழங்கள், காய்கறிகளை தவிர்த்து உள்ளூரில் விளைவதை வாங்கி சாப்பிடவும். அசைவ உணவை முற்றிலும் தவிருங்கள். முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். கீரை வகைகளை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். அதனை சூப் செய்து பருகி வந்தால் நார்ச்சத்துக்கள் அதிகரிக்கும். ரசத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் அதில் சேர்க்கப்படும் சீரகம் மிளகு போன்றவை சளியை கட்டுப்படுத்தும். மேலும் ஆண்கள் தினமும் 3 துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் நல்லது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |