உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் இதன் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்து விட்டாலும் பிற நாடுகளில் இதன் பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது. அதிகமாக இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 800 பேர் உயிர் இழந்தனர்.
15 ஆயிரத்தை தாண்டியது..!
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 15,297 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் இதுவரை 3,49,090 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,00,330 பேர் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு – எல்லைகளுக்கு சீல் வைப்பு..!
இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |